தனி நபர்
இந்நிலையில், கோலி என்ற தனி நபராக ஒரு போதும் உலக கோப்பையை வெல்ல முடியாது, மற்ற வீரர்களும் தங்கள் ஆட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:
பேட்டிங் வரிசை எப்படி?
என் கணிப்புப்படி, தோனி 5ம் நிலை வீரராக களமிறங்கவேண்டும். ரோகித் சர்மா, தவான், கோலி, 4ம் நிலை வீரர், அதன் பிறகு தோனி என்றுதான் பேட்டிங் வரிசை இருக்கவேண்டும். பிறகு பாண்டியா களமிறங்கலாம்.
4 அணிகள்
அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நிச்சயமாக நுழையும். 4வது அணியாக நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்று இருக்கலாம். கோலி பிரமாதமான இன்னிங்ஸ்களினால் பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கலாம்.
தனிநபரால் முடியாது
ஆனால் உலக கோப்பை தொடரில் அவர் ஒரு தனிநபராக ஒரு போதும் உலக கோப்பையை வெல்ல முடியாது. அவருடன் மற்ற வீரர்களும் தங்கள் ஆட்டங்களை மேம்படுத்த வேண்டும்.
2 வீரர்கள் ஆட வேண்டும்
ஒவ்வொரு போட்டியிலும் 2 வீரர்கள் தங்கள் ஆட்டத்தை வேறு தளத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அணியினர் உதவியின்றி நீங்கள் அதிகம் எதுவும் செய்து விட முடியாது. கோலி என்ற தனிநபரால் ஒரு தொடரையே வெல்ல முடியாது.
ஏமாற்றமே மிஞ்சும்
ஒவ்வொரு முக்கியக் கட்டத்திலும் பிற வீரர்களும் பங்களிப்பு செய்வது அவசியம். இது நடக்க வில்லையெனில் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். நமது வீரர்கள் போதிய கிரிக்கெட் அனுபவம் உள்ளவர்கள். ஆனால், சூழ்நிலை குறித்த விழிப்புணர்வு மிக முக்கியம் என்றார்.