For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேக் டூ பேக் விக்கெட்ஸ்.. விடாமல் போராடும் இந்தியா - உச்சக்கட்ட பரபரப்பில் இறுதிப் போட்டி

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், 139 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் நியூசி., அணி முதல் விக்கெட்டை இழந்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஆறாவது நாள் (ரிசர்வ் டே) ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

 WTC Final: திடீரென ஓய்ந்த மழை.. அடுத்த 6 நிமிடத்தில்.. நிம்மதியுடன் எடுத்த நடவடிக்கைகளுக்கு WTC Final: திடீரென ஓய்ந்த மழை.. அடுத்த 6 நிமிடத்தில்.. நிம்மதியுடன் எடுத்த நடவடிக்கைகளுக்கு

ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 நியூசிக்கு வாய்ப்பு

நியூசிக்கு வாய்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின், முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர். பிறகு, நேற்று நடந்த ஐந்தாவது நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கான்வே அதிகபட்சமாக 54 ரன்களும், வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 4, இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம், இந்தியாவை விட அந்த அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.

 இந்தியா திணறல்

இந்தியா திணறல்

இதைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஷுப்மன் கில் 8 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் டிம் சவுதி எல்பிடபிள்யூ ஆக்கினார். நேற்றைய 5வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன்.23) மாற்று நாளில் தொடங்கிய ஆட்டத்தில், கேப்டன் கோலி மிக விரைவாக 13 ரன்களில், ஜேமிசன் ஓவரில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அதேபோல், புஜாராவும் 15 ரன்களில் ஜேமிசன் பந்தில் வெளியேறினார். பிறகு ரஹானேவை 15 ரன்களில் போல்ட் வெளியேற்ற, இந்தியா லன்ச்சுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

 அசைத்து பார்க்க வாய்ப்பு

அசைத்து பார்க்க வாய்ப்பு

இந்நிலையில், மதிய உணவுக்கு பிறகு ஜடேஜா, பண்ட், அஷ்வின் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், நியூசிலாந்துக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டார்கெட் மிகக் குறைவு. ஆனால், இந்தியா சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில், குறிப்பாக, ஸ்பின்னுக்கு பந்து ஒத்துழைத்தால், இந்திய அணி நியூசி.,யை அசைத்து பார்க்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

 2வது விக்கெட்

2வது விக்கெட்

இந்நிலையில், தேநீர் இடைவேளைக்கு பிறகு, அஷ்வின் ஓவரில் இறங்கி அடிக்க ஆசைப்பட்ட டாம் லாதம் 9 ரன்களில் அவுட்டானார். 41 பந்துகளை சந்தித்த லாதம் அஷ்வின் ஓவரில் ஆரம்பம் முதலே தடுமாறினார். அஷ்வினை டீல் செய்ய முடியாமல் திணறினார். ஒருக்கட்டத்தில் இறங்கி அடிக்க நினைத்து, பந்தை தவறவிட, பண்ட்டால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். பிறகு, அஷ்வின் ஓவரில் டெவோன் கான்வே 19 ரன்களில் எல்பி ஆகியுள்ளார். எனினும், நியூசிலாந்து கைவசம் இன்னும் 8 விக்கெட்டுகள் உள்ளன. டார்கெட்டும் 100க்கு கீழ் வந்துவிட்டதால், அந்த அணியே வெற்றிப் பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்திய பவுலர்கள் தேநீர் இடைவேளைக்கு பிறகு மிகச் சிறப்பாக பந்து வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 23, 2021, 21:06 [IST]
Other articles published on Jun 23, 2021
English summary
nz ahead of india in winning chance wtc final - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X