அனைத்து நினைவுகளுக்கும் நன்றி.. வருத்தப்பட்ட அஸ்வின்.. கண்ணீர் விட்ட சிஎஸ்கேயன்ஸ்
Recommended Video

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது.
இவர் மொத்தம் 7.60 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். சென்னை அணி இவரை வாங்க தவறிவிட்டது.
முக்கியமாக சென்னை அணி தனக்கு இருந் ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டது. இதுகுறித்து அவர் டிவிட் செய்துள்ளார்.
அஸ்வின் டிவிட்
அஸ்வின் தனது டிவிட்டில் ''கேசினோ தான் எப்போதும் ஏலத்தின் வீடு. கிங்ஸ் லெவன் அணிக்கு சென்றது மகிழ்ச்சி. இதுதான் என் புது வீடு. சென்னை அணிக்கு நன்றி. அனைத்து அழகான நினைவுகளுக்கும் நன்றி'' என்றுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதில் அளித்து இருக்கிறது. அதில் ''ஒரு சிறந்த அணியில் இருந்து அடுத்த சிறந்த அணிக்கு சென்றுள்ளீர்கள். அஸ்வின் வாழ்த்துக்கள். அனைத்து நினைவுகளுக்கும் விசில் போடவும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மெர்சல் நாயகன்
இவர் மெர்சல் படத்தை வைத்து டிவிட் செய்துள்ளார். அதில் ''பஞ்சாப்பும் தமிழ்நாடு தான்.. மெர்சல் பாத்தீங்களா இல்லையாடா..✌ ஆளப்போறான் தமிழன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
லீவ்
இவர் சென்னைக்கு எதிராக பஞ்சாப் மோதும் போட்டி குறித்து பேசியுள்ளார். அதில் ''சிஎஸ்கே மேட்ச் நடந்தா உடம்பு சரியில்லைன்னு லீவ் போட்டுடு தல'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications