
ஆசிய கோப்பை போட்டி
மிகவும் முக்கியமான இந்த போட்டியில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ரவீந்திர ஜடேஜா இல்லாதது தான். காயம் காரணமாக அவர் விலகியதால், மாற்று வீரராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற குழப்பம் உள்ளது. இந்நிலையில் அவருக்கு மாற்றாக ஒரு ஸ்பின்னர் மட்டுமல்லாது மேலும் ஒரு கூடுதல் ஸ்பின்னரையும் சேர்க்க ராகுல் டிராவிட் திட்டமிட்டுள்ளார்.

பவுலிங் யூனிட்
ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரராக ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் களத்தில் நல்ல அனுபவம் உள்ள அஸ்வினால், பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் கொடுக்க முடியும். ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்டாக ஆவேஷ் கானை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவை அணிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது தான்.

என்ன காரணம்
பாகிஸ்தான் அணி கடந்த 2 போட்டிகளிலும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறினர். துபாய் பிட்ச்-ம் அதற்கேற்றார் போலவே ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. அப்படி பார்த்தால் தீபக் ஹூடா, அஸ்வின் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகிய 3 பேருமே 3 விதமான ஸ்பின்னர்கள் ஆவர். வெவ்வேறு வகையான பவுலிங்கால் பாகிஸ்தான் அணி திணறும்.

வித்தியாச படை
இதன் மூலம் அஸ்வின், யுவேந்திர சாஹல், தீபக் ஹூடா என 3 ஸ்பின்னர்கள் மற்றும் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் என மொத்தமாக 6 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதிலும் ஓவர்களில் பல திட்டங்களை டிராவிட் வைத்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications