
எப்படி
இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இதனால் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே அடுத்த போட்டியில் ஆட உள்ளார். அதேபோல் இந்திய அணியில் காயம் காரணமாக முகமது ஷமியும் அணியில் இடம்பெற போவது இல்லை.

யார்
அதன்படி இந்த நிலையில் இந்திய அணியில் செய்ய வேண்டிய 5 மாற்றங்கள் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இவரின் கருத்துப்படி இந்திய அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட வேண்டும். அவருக்கு பதிலாக சுப்மான் கில் அணிக்குள் கொண்டு வரப்பட வேண்டும். கில் ஓப்பனிங் இறங்க வேண்டும்.

வேறு எந்த வீரர்
அதேபோல் கோலிக்கு பதிலாக ராகுல் இறங்க வேண்டும். இவர் மிடில் ஆர்டரில் பேட்டிங் இறங்கலாம். அதேபோல் சாஹாவிற்கு பதிலாக அணிக்குள் பண்ட் கொண்டு வரப்பட வேண்டும். ஹனுமா விஹாரிக்கு பதிலாக ஜடேஜா வர வேண்டும். அணிக்குள் 5 பவுலர்கள் இருக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.ஷமிக்கு பதிலாக சைனி அல்லது சிராஜ் இடம்பெறலாம் என்றுள்ளார்.

கம்பீர் கருத்து
கம்பீர் கருத்தின்படி இந்திய அணியில் அடுத்த டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ராகுல், பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா , உமேஷ் யாதவ், சிராஜ் அல்லது சைனி ஆகியோர் இடம்பெறலாம் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications