
எப்படி
இந்த நிலையில்தான் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்தியா மோசமாக சொதப்பி உள்ளது. டி 20 தொடரில் இந்தியா வெற்றிபெற்றது. ஆனாலும் ஒருநாள் தொடரில் மோசமாக ஆடி இந்தியா தோல்வி அடைந்தது.

டெஸ்ட்
அதன்பின் நடந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தியா மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மோசமாக சொதப்ப காரணமே அணியின் ஓப்பனிங் சரியில்லாமல் போனதுதான். இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு பதில் ஓப்பனிங் இறங்கிய மயங்க், பிரித்வி ஷா, சுப்மான் கில் என்று யாருமே சரியாக ஆடவில்லை.

ராகுல்
கே. எல் ராகுல் மட்டும் கொஞ்சம் நம்பிக்கை அளித்தார். இந்திய அணியில் ரோஹித் சர்மா இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது இன்னும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. இப்படிப்பட்ட வீரரைத்தான் கோலி ஆதரிக்காமல் தொடர்ந்து புறக்கணிக்கிறார் என்று புகார் வைக்கப்படுகிறது. கோலி வேண்டும் என்றே ரோஹித் சர்மாவை புறக்கணிக்கிறார்.

தேவையின்றி அரசியல்
கோலி தேவையின்றி அரசியல் செய்கிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இப்போது ரோஹித் இல்லாமல் எதுவும் நடக்காது என்று தெரிந்துவிட்டது. இதனால் கோலி இனியாவது ரோஹித் சர்மாவிடம் மனம்விட்டு பேச வேண்டும். அவருடன் நட்பாக இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகிறது.

கோரிக்கைகள்
அதேபோல் ரோஹித்தை கோலி தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தற்போது தனது பிட்னஸை நிரூபித்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications