
சீக்கிரம் முடித்தோம்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், இந்திய வீரர்களை கிண்டல் செய்யும் வகையில் பேசினார். இது குறித்து பேசிய அவர் இந்த போட்டி மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து விட்டது. வெறும் 37 ஓவர் தான் போட்டி நடைபெற்றது. இதுபோன்ற சம்பவங்களை நாம் அதிக முறையில் பார்க்க முடியாது. இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் எப்படி செயல்படும் என்று எங்களால் கணிக்க முடியவில்லை.

நெருக்கடியை ஏற்படுத்தினோம்
அதனால் எந்த இலக்கை துரத்த போகிறோம் என்று கொஞ்சம் கூட நாங்கள் யோசிக்கவில்லை. போட்டிக்கு சென்று எங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதில் நாங்கள் குறியாக இருந்தோம். இந்திய அணி வீரர்களை நாங்கள் நெருக்கடிக்கு ஆளாக்க விரும்பினோம். அதிர்ஷ்டவசமாக எங்களால் அதனை செய்ய முடிந்தது. இது போன்ற நாள் எல்லா அணிகளுக்கும் நடக்கும்.
நல்ல வேலையாக நாங்கள் வெற்றி பெறும் அணியாக இருந்தோம்.

அதிரடி பேட்டிங்
இது போன்ற நாட்களில் தான் பந்து பேட்டில் படும்போது பில்டர்கள் கையில் நேராக பந்து செல்லும். ட்ராவிஸ் ஹெட் மற்றும் மார்ஸ் ஆடிய விதம் நிச்சயமாக பாராட்டத்தக்கும் வகையில் இருந்தது. அவர்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாடிக் கொண்டே இருந்தார்கள். முதல் போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு எங்களால் மீண்டும் இந்தியாவை வீழ்த்த முடிந்து விட்டது. நான் கேட்ச் பிடித்தது குறித்து எனக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.

சிறந்த கேட்ச்
நல்லவேளை பந்து எனது கையில் மாட்டிக் கொண்டது. நிச்சயமாக அது பெரிய விக்கெட் தான் ஏனென்றால் ஹர்திக் பாண்டியா தனி ஆளாகவே ஆட்டத்தை மாற்றி விடுவார். இதனால் அதனை ஒரு திருப்புமுனையாகவே சொல்லலாம் என ஸ்மித் கூறியுள்ளார். தற்போது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில் கடைசி ஆட்டம் வரும் புதன்கிழமை சென்னையில் நடைபெறுகிறது .


Click it and Unblock the Notifications











