பவுன்சர் கை கொடுத்தது
காரணம்.... மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுன்சர்கள் தான். பாகிஸ்தான் வீரர்கள் பெவிலியன் திரும்ப அந்த அணியின் பவுன்சர் பந்துவீச்சு பெருமளவில் கை கொடுத்தது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணி ஆப்கான் அணியின் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு வென்றது. இந்நிலையில் வலுவான மே.இ.தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.
வீரர்கள் அதிர்ச்சி
மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர், தாமஸ், ரசல் பாகிஸ்தான் பேட்ஸ்மென்களின் புருவத்தை குறி வைக்கும் உயரத்துக்கு பந்துகளை வீசி அதிர்ச்சி அளித்தனர். வரும் வியாழக்கிழமையன்று நடைபெறும் ஆஸி.க்கு எதிராக கிமார் ரோச் களம் புகுந்து விட்டால், மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சு அபாரமாக இருக்கும்.
நாதன் எச்சரிக்கை
ஆஸ்திரேலிய அணியையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. மிட்செல் ஸ்டார்க், கமின்ஸ், நாதன் கூல்ட்டர் நைல் போன்றவர்கள் அணியில் இருக்கின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் நாதன் கூல்ட்டர் நைல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிகிச்சைக்கு ரெடியா?
அவர் கூறியிருப்பதாவது: மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் சிகிச்சை அளிக்க காத்திருக்கிறோம். அது பவுன்சர் பந்துகள் வழியாக. எங்களின் பந்துவீச்சால் அவர்களை திணறடிக்க போகிறோம்.
நிச்சயம் உண்டு
அந்த ஒரு அணிக்கு மட்டும் என்று எண்ணிவிட வேண்டாம். உலக கோப்பை தொடரில் கலந்து கொண்டுள்ள அனைத்து அணிகளுக்கும் பவுன்சர் சிகிச்சை தர இருக்கிறோம். ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் கன்பார்ம். மைதானங்களின் தன்மை மாறியிருக்கிறது. எப்படி இருந்தாலும் பவுன்சர்கள் நிச்சயம் உண்ம‘டு என்றார்.