
அறிக்கை
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வீரர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு சில கிரிக்கெட் ரசிகர்கள் இனவெறி தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன ரீதியான தாக்குதல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக எந்த விதமான சகிப்புத்தன்மையையும் நாங்கள் காட்ட மாட்டோம்.

வீரர்கள்
வீரர்களுக்கு எதிரான இது போன்ற தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உரிய நடவடிக்கையை எடுக்கும். வீரர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து இருக்கிறோம்.

ஐசிசி
இவர்களை ஐசிசி விதிப்படி விசாரணை செய்வோம். இவர்களை முறையான விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுப்போம். இவர்கள் மீது தடை விதிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் .

தடை
ஐசிசி விதிமுறைக்கு உட்பட்டு இவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். இந்த தொடரை நடத்தும் நாடு என்ற விதத்தில் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறோம். இந்தியாவில் இருக்கும் எங்கள் நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்கிறோம்.

மன்னிப்பு
வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். சிட்னி மைதானம் எல்லோரையும் வரவேற்கிறது. வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம், என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications