
ஆஸி, டெஸ்ட் தொடர்
படுமோசமான தோல்வியை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது போட்டியில் நல்ல கம்பேக் தர வேண்டும் என முனைப்புடன் உள்ளது. அந்த போட்டி வரும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சியையும் நாக்பூரிலேயே திட்டமிட்டு வைத்திருந்தார் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூவ் மெக் டொனால்ட். இந்த முறையும் அதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

என்ன நடந்தது?
நாக்பூர் பிட்ச்-ல் அதிகப்படியான டேர்ன் இருந்தது. இனி வரும் போட்டிகளிலும் இதே போன்ற பிட்ச் தான் பயன்படுத்தப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 3 நாட்களில் ஆட்டம் முடிந்ததால், மீதமுள்ள 2 நாட்களில் அந்த பிட்ச்-ல் பயிற்சி மேற்கொள்ள விதர்பா மைதான நிர்வாகத்திடம் ஸ்பெஷல் கோரிக்கையை ஆஸ்திரேலிய அணி வைத்திருந்தது. அங்கு ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாடி தயாராகவிருந்தனர்.

காத்திருந்த ஷாக்
2 நாட்களுக்கு பிட்ச்-ஐ கொடுப்பதில் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள் என நினைத்து ஆஸ்திரேலிய அணியினர் 3வது நாள் முடிந்து ஓட்டல் அறைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் சென்ற உடனேயே பிட்ச் முழுவதும் அதிகப்படியான தண்ணீர் ஊற்றப்பட்டுவிட்டது. இதனால் பிட்ச்-ன் தன்மை முற்றிலும் வேறு மாதிரி மாறி அங்கு பயிற்சி பெற முடியாது. இதனை கேட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வேண்டுமென்றே மாற்றினார்களா?
ஒரு போட்டி முடிந்தவுடன் பிட்ச்-ஐ தண்ணீர் விட்டு சுத்தம் செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் போட்டியானது 3வது நாளிலேயே முடிந்துவிட்டது. அப்படி இருக்கையில் அவசர அவசரமாக எதற்காக பிட்ச்-ல் தண்ணீர் விட வேண்டும் என ஆஸ்திரேலிய அணி குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பதில் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications