4 விக்கெட்
நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர் வீசிய ஆவேஷ் கான் 18 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது குறித்து பேசிய ஆவேஷ் கான் என் தந்தையின் பிறந்தநாள் அன்று 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தந்தைக்கு பரிசாக அளிக்கிறேன்.நேற்று ஸ்டம்பை நோக்கி பந்துவீசுவது என்பது தான் திட்டமே.
பந்துவீச்சில் திட்டம்
ஆடுகளத்தில் பந்து எழும்புவதை சரியாக கணிக்க முடியவில்லை. சில பந்துகள் பவுன்ஸ் ஆகின்றன,சில பந்துகள் எழும்பவில்லை. இதனால் எப்போதாவது பவுன்சரும், நல்ல லேங்த் பந்துகளையும் மாற்றி வீசினேன். வெண்டர் டுசனுக்கு ஃபயன் லேக்கை உள்ளே வைத்துவிட்டு, மின் விக்கெட்டில் பில்டரை நிறுத்தினோம்.
பண்ட் கொடுத்த ஐடியா
இதற்கு நல்ல பலனாக வெண்டர் டுசன் அடித்து ஆட முற்பட்டு ஆட்டமிழந்துவிட்டார். யான்செனுக்கு பவுண்டர் வீசிய பிறகு ரிஷப் பண்ட் லெக் கட்டர் பந்தை வீச சொன்னார். இதே போன்று கேசவ் மகாராஜ்க்கு ஸ்லோ பாலை வீச சொன்னார். அதற்கு நல்ல பலனும் தந்தது கடைசி ஆட்டத்தில் எங்களுடைய 100 திறனை வெளிப்படுத்துவோம்.
100 சதவீதம் திறன்
ஒரு அணியாக விளையாடுகிறோம். ஃபில்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக பணியாற்றுகிறோம். ஒருவருக்கு ஒருவர் அணியில் உறுதுணையாக இருக்கின்றோம் என்று ஆவேஷ் கான் கூறினார். இந்த நிலையில், ஆவேஷ் கான் கடந்த சில போட்டிகளாக கட்டுக்கோப்பாக பந்துவீசி வருவதால் டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.