
ஆவேஷ் கான்
அதாவது பிரதான அணியில் இருந்த ஒரு வீரரை நீக்கிவிட்டு, மாற்று வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆவேஷ் கான் ஆசிய கோப்பை தொடரில் மோசமாக பந்துவீசினார். குறிப்பாக ஹாங்காங்க்கு எதிராக பந்துவீச்சில் அரைசதம் கடந்தார். இந்த நிலையில், அவரை அணியிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தீபக் சாஹர்
தற்போது, ஆவேஷ் கானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இருப்பினும் அவரை மாற்றாமல் 2 சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியிலேயே வைத்திருந்தனர். தற்போது இந்தியா தோற்றதால் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரை அணியில் பிசிசிஐ சேர்த்துள்ளது.

மாற்றம் ஏன்?
கடந்த 2 போட்டியிலும் ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இந்திய அணியில் இருந்தனர். இதனால் கடைசி 2 ஓவரில் பெரிய இலக்கை அடிக்க முடியவில்லை. இந்த நிலையில், தீபக் சாஹர் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாட கூடியவர். பந்துவீச்சிலும் நல்ல ஸ்விங் செய்ய கூடியவர். துபாயில் ஸ்விங் எடுக்காத நிலையில், பந்துவீச்சில் பல வகையில் வேரியஷன் செய்து விக்கெட் எடுப்பார்.

வேறு யாருக்கு வாய்ப்பு
இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நிச்சயமாக தீபக் சாஹர் இடம் பிடிப்பார். இதே போன்று பிளேயிங் லெவனில் தீபக் சாஹரை நீக்கிவிட்டு அக்சர் பட்டேலையும், ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்கையும் பிளேயிங் லெவனில் சேர்க்க ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











