
154 ரன்கள்
இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள ருத்துராஜ் கெய்க்வாட், தொடர்ந்து 2 நாட்களில் 2 சதம் விளாசி அசத்தியுள்ளார். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய ருத்துராஜ், 143 பந்துகளில் 154 ரன்கள் விளாசி அசத்தினார். இதில்14 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும்.

2வது சதம்
இதற்கு முதல் நாள் தான் மத்திய பிரதேஷ் அணியுடன் விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட் 134 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் 2 போட்டியில் விளையாடி 261 ரன்கள் எடுத்துள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கடேஷ் அசத்தல்
இதே போன்று ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி இந்திய டி20 அணியில் இடம்பிடித்த வெங்கடேஷ் ஐயரும் விஜய் ஹசாரே கோப்பையிலும் கலக்கியுள்ளார். மத்திய பிரதேஷ் அணிக்காக விளையாடும் அவர் 84 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார். மேலும் பந்துவிச்சிலும் 55 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் நடுவரிசையில் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார். இதன் மூலம் வெங்கடேஷ் ஐயரும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல வாய்ப்பு
இதே போன்று சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 2 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆர்.சி.பி. வீரர் ஹர்சல் பட்டேல் 24 ரன்கள் விட்டுகொடுத்து 1 விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்கா தொடரில் தேர்வாக விஜய் ஹசாரே தொடர் நல்ல வாய்ப்பாக அமையும் என்பதால் வீரர்கள் போட்டி போட்டு கொண்டு விளையாடுகின்றனர். இதனால் யாரை விடுவிது யாரை சேர்ப்பது என்ற தலைவலி தேர்வுக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











