
ஆஸ்திரேலியா வழி
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஒரு கேப்டன் இருக்கும் போதே அடுத்த கேப்டனை தயார் செய்வார்கள். இவர் தான் அடுத்த ஸ்டார் என்று அடையாளப்படுத்தி துணை கேப்டன் பொறுப்பு கொடுத்து, கேப்டனிடமிருந்த கற்று கொள்ள வைப்பார்கள். பாண்டிங் இருக்கும் போது மைக்கில் கிளார்க்கும், மைககில் கிளார்க் இருக்கும் போது ஸ்மித் என்று எதிர்கால கேப்டனை இப்படி தான் வளர்ப்பார்கள்.

இந்தியாவின் எதிர்காலம்
இதே பாணியை தான், இந்தியாவும் பின்பற்றியது. தோனி கேப்டனாக இருக்கும் போதே விராட் கோலியை துணை கேப்டனாக பதவி கொடுத்து கற்று கொள்ள வாய்ப்பு வழங்கியது. அப்படி தான், இன்று ரோகித் சர்மா, விராட் கோலி கேப்டன்களாக இருக்கும் போது துணை கேப்டன் பதவி கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கலக்கிய கே.எல்.ராகுல்
பெங்களூருவை சேர்ந்த ராகுல், ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி அணியில் கோலியின் நிழலாக இருந்தார். பின்னர் தனது திறமையை நிரூபித்து அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கி பஞ்சாப் அணியை வழிநடத்தினார். கேப்டனாக தனி ஆளாக நின்ற பஞ்சாப் அணிக்காக ராகுல் பல போட்டிகளில் போராடியுள்ளார். இதனால் கே.எல்.ராகுல் தான் இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார்.

வாய்ப்பு
விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்தபோவது இவர் தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டது பி.சி.சி.ஐ. டெஸ்ட் போட்டிகளில் கோலியிடமிருந்தும், ஒருநாள், டி20 போட்டிகளில் ரோகித்திடமிருந்தும் பாடங்களை கற்று கொள்ள சிறந்த வாய்ப்பு இனி ராகுலுக்கு கிடைத்துள்ளது.ராகுல் ஜாம்பவான்கள் வரிசையில் இடம்பெறுவாரா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.


Click it and Unblock the Notifications