கைகோர்ப்பதில் சந்தோஷம்
இதுகுறித்து பிசிசிஐயின் தற்காலிக செயல் அதிகாரி அமிதாப் சௌத்ரி கூறியதாவது: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்படுவதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
கார் பிரபலம்
இந்த முறை அந்த நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய எஸ்யூவி கார் ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வமான பார்ட்னராக இணைந்துள்ளது. அதனால், அந்த காரை பிரபலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்சர்களுக்கு 1 லட்சம்
அதற்காக வீரர்கள் அடிக்கும் சிக்சர்களை ஒருகையில் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். காண்போரை ரசிக்க வைக்கும் வகையில் பந்தை பிடிக்கும் அதிர்ஷ்டசாலி நபர் ஒருவருக்கு இந்த கார் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
டி 20 தொடரில் அறிமுகம்
ரசிகர்கள் ஒருகையில் பந்தை பிடித்தால் அவர்களுக்கு பணம் வழங்குவது புதியது அல்ல. ஆனால்... அந்த திட்டத்தை முதலில் டிரெண்டாக்கியது நியூசிலாந்து டி20 தொடர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.