
தென்னாப்பிரிக்க தொடர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கே.எல்.ராகுல் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஷாரூக்கான் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை

காரணம் இது தான்
இது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் அனுபவமும், இளமையும் கலந்த அணியை உருவாக்கியதாக தெரிவித்தார்

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
அதன் பிறகு இந்தியாவில் அடுத்தடுத்து மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடரில் சுழற்பந்துவீச்சாளர் பிஸ்னாய், வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான். அதிரடி வீரர் ஷாரூக்கான், ஐ.பி.எல். தொடரில் கலக்கிய ஹர்சல் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பி.சி.சி.ஐ. திட்டம்
இதன் மூலம் தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு பெரும்பாலான இளம் வீரர்களை வைத்தே இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியும், அடுத்த ஆண்டு ஐ.சி.சி. உலகக் கோப்பையும் நடைபெறுகிறது. இதற்கான அணியை உருவாக்க, நடப்பாண்டிலேயே பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











