
நிஜமா பாஸ்!
இந்த நிலையில் அப்படியா. இது நடக்குமா என்று கேப்டன் டோணியிடமே செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு டோணியும் தனது பாணியில் பதிலளித்துள்ளார். ஜிம்பாப்வேயில் டோணி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரில் ஆடவுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார் டோணி.

அது அவங்க முடிவு பாஸ்!
அப்போது அவர் கூறுகையில், நான் விளையாட்டை ரசித்து ஆடவில்லை என்று கூற முடியாது. பிசிசிஐ என்ன முடிவெடுக்கிறதோ அதுவே முடிவு. எனது கேப்டன் பதவி குறித்தும் பிசிசிஐதான் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். இதில் எனது முடிவு என்று எதுவும் இல்லை என்றார் டோணி.

ஜிம்பாப்வே தொடர்
ஜிம்பாப்வே அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பல சமயங்களில் அது நம்மை சோதித்துள்ளது. சவாலாக இருந்துள்ளது. சரியான பேட்டிங் இல்லாவிட்டால் நாம் சிரமப்பட நேரிடும்.

இவங்களை வச்சுக்கிட்டு!
நமது அணியில் தற்போது பல புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களை வைத்துக் கொண்டு ஜி்ம்பாப்வேவுடன் விளையாடவிருப்பது புதிய அனுபவமாக இருக்கும் என்றார் டோணி.

3+3 போட்டிகள்
இந்தியாவும், ஜிம்பாப்வேயும் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளனர். ஜூன் 11ம் தேதி இந்தத் தொடர் ஆரம்பிக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி ஹராரேவில் 11ம் தேதி நடைபெறும்.


Click it and Unblock the Notifications











