
ஐபிஎல்லை நடத்த உரிமை
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐக்கு உரிமை உள்ளதாக முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை நடத்துவதில் சிக்கல்
கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் நுழைய செப்டம்பர் மாதம் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலக கோப்பை தொடர் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டி20 உலக கோப்பை தொடரை அடுத்த ஆண்டு அல்லது 2022க்கு ஒத்திவைக்க ஐசிசி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு நாளை மறுநாள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பையை தள்ளிவைக்க முடிவு
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் நுழைய தடை விதிக்கப்பட்டதாலேயே டி20 உலக கோப்பை தொடரை தள்ளி வைக்கும் முடிவை ஐசிசி மேற்கொண்டுள்ளதாகவும், ஐபிஎல் போட்டிகளை நடத்த இடமேற்படுத்திக் கொடுக்கும் நோக்கம் இதில் வெளிப்படவில்லை என்றும் மைக்கேல் ஹோல்டிங் மேலும் கூறியுள்ளார்.

எந்த பாதிப்பும் இருக்காது
தொடர்ந்து பேசிய ஹோல்டிங், பந்துகளை ஷைன் செய்ய எச்சில் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார். இந்த புதிய விதிக்கு வீரர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள சிறிது காலம் பிடிக்கும் என்றும் எச்சிலுக்கு பதிலாக வியர்வையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், பந்து ஷைன் ஆவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











