For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முன்னணி வீரர்களை தக்க வைப்பதில் சிக்கல்.. ஐபிஎல் அணிகளுக்கு ஆப்பு.. புதிய அணிகள் வருவதால் நடவடிக்கை!

மும்பை: 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலம் முறைக்கு பிசிசிஐ போட்டு வைத்துள்ள திட்டம் 8 அணிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரே இன்னும் முடிவடையாத சூழலில் 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

இதற்கு காரணம் அடுத்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகளை சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

மெகா ஏலம்

மெகா ஏலம்

ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 2022ம் ஆண்டு ஐபிஎல் முதல் 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் கொண்ட தொடராக மாறவிருக்கிறது. இந்த 2 அணிகளையும் எந்த நிறுவனம் வாங்கப்போகிறது, எந்த நகரத்தை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

2 புதிய அணி

2 புதிய அணி

ஆனால் 2 புதிய அணிகளை வாங்குவதற்கு பிரபல தொழிலதிபர்களிடையே கடும் போட்டிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிசிசிஐ-க்கு பல கோடிகள் கொடுக்கவும் தயார் என முன் வருவதாக தெரிகிறது. அதன்படி பார்த்தால், அதானி குழுமமும், ஆர்பிஎஜி குழுமமும் 2 அணிகளை வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஏலத்தில் மாற்றம்

ஏலத்தில் மாற்றம்

இந்நிலையில் 2 அணிகள் புதிதாக இணைவதால் இந்தாண்டு நடைபெறவிருக்கும் மெகா ஏலத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படவிருக்கின்றன. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும் எனக்கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Right to match

Right to match

மேலும் இந்த மெகா ஏலத்தில் Right ot Match Card ஐ பயன்படுத்த முடியாது. RTM என்பது 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணிகள் தாங்கள் விடுவித்த வீரரை மீண்டும் பழைய தொகைக்கே ஏலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த முறையினால் மற்ற அணிகளுடனான ஏல போட்டி குறையும். ஆனால் இதனையும் அடுத்தாண்டுக்கான ஏலத்தில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பிசிசிஐ-ன் இந்த நடவடிக்கையால் புதிதாக வரும் 2 அணிகளுக்கும் முன்னணி வீரர்கள் கிடைப்பார்கள்.

ஐபிஎல் சிக்கல்

ஐபிஎல் சிக்கல்

இதுமட்டுமல்லாமல் ஆட்ட முறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது இருக்கும் முறைபடி பார்த்தால், 2 புதிய அணிகள் வந்தால் போட்டிகளின் எண்ணிக்கை மொத்தமாக 94 ஆக உயரும். மேலும் கிட்டத்தட்ட 3 மாத காலங்கள் அதற்கு தேவைப்படும். எனவே போட்டிகளின் எண்ணிக்கையை 74 ஆக குறைத்து 60 நாட்களுக்குள் தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

புது முறை

புது முறை

அதாவது, தற்போதைய விதிமுறை படி, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை லீக் போட்டியில் மோத வேண்டும். அதன் பின்னர் ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும். ஆனால் புதிய நடைமுறையில், மொத்தம் உள்ள 10 அணிகளும் 2 பிரிவுகளாக ( தலா 5) பிரிக்கப்படும். அதில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் 2 முறை போட்டியிட்டு, புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும்.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

2 புதிய அணிகளை வைத்து பிசிசிஐ பெரிய திட்டங்களை போட்டு வருகிறது. அதாவது இரு அணிகளாலும் கிட்டத்தட்ட 14 போட்டிகள் கூடுதலாக நடக்கும். இதன் மூலம் சுமார் ரூ.800 கோடி வரை பிசிசிஐக்கு வருமான கிடைக்கவுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியிடம் இருந்தும் சுமார் ரூ.2000 கோடி வரை வருவாய் கிடைக்கவுள்ளது. வீரர்களுக்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும் எனத்தெரிகிறது.

Story first published: Tuesday, August 10, 2021, 19:50 [IST]
Other articles published on Aug 10, 2021
English summary
BCCI likely to allow only three retentions for 8 franchises due to inclusion of two new teams
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+