
தற்காலிக கோச்
தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்றுள்ளார். வங்கதேசத் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு நிரந்தர பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

இயக்குநர்
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்களுக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டுமென்பதே விருப்பமாக உள்ளது. எனவே ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. உலக கோப்பை போட்டியின்போது, ரவிசாஸ்திரி அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டு இருந்தார். வங்காளதேச தொடரில் அவர் அவரது பதவி மேலும் நீட்டிக்கப்பட்டது.

வங்கதேச டூர் முடிந்ததும்
இந்த நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்படுகிறார். வங்காளதேச தொடர் முடிந்த பிறகு அணியின் இயக்குனராக இருக்கும் ரவிசாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்படுகிறார். ஜிம்பாப்வே தொடரில் அவர் பயிற்சியாளராக இருப்பார்.

அதிக சம்பளம்
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கும் ரவிசாஸ்திரியின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.7 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இதன்மூலம் கிரிக்கெட் உலகின் அதிகம் பணம் சம்பாதிக்கும பயிற்சியாளர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். டெலிவிசன் வர்ணனையாளராக பணியாற்றிய போது கிரிக்கெட் வாரியம் அவருக்கு ரூ.4 கோடி கொடுத்தது. இயக்குனராக நியமிக்கப்பட்ட போது ரூ.6.2 கோடி கொடுக்கப்பட்டது. தற்போது பயிற்சியாளர் பதவிக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











