டெல்லி : ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்கவுள்ள நிலையில் முதலில் 2 வீரர்கள் உள்ளிட்ட சிஎஸ்கே அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது பிசிசிஐயின் மருத்துவ குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஜோஷ் ஹாசல்வுட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் அதில் பங்கேற்க தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருந்தால் என்ன நாங்கள் யூஏஇயில் நடத்தி முடிப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளது பிசிசிஐ. பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் தொடர்ந்து ஒவ்வொன்றாக தீர்த்து ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகி வருகிறது. ஆயினும் கொரோனாவை எதிர்த்து பிசிசிஐயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடந்த வாரத்தில் எடுக்கப்பட்ட டெஸ்ட்டில் 2 சிஎஸ்கே வீரர்கள் மற்றும் 11 ஊழியர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அர்ப்பணிப்பின் வெற்றியை இணைந்து கொண்டாடுவோம்... ஐபிஎல்லின் பிரமோவை வெளியிட்ட பிசிசிஐ
இதனால் மற்ற அணிகளை சேர்ந்த வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் அச்சத்துடன் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹாசல்வுட் மற்றும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிசிசிஐயின் மருத்துவ குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.