
தென்னாப்பிரிக்க தொடர்
காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலிய தொடரிலும் விளையாட முடியாமல் தடுமாறினார். இதனையடுத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்ற நோக்கில், டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து பும்ராவுக்கு மாற்று வீரரை தேடும் பணிகளில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது.

தடுமாறி வரும் பிசிசிஐ
இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவின் விஷயத்தை பார்த்துக்கொண்டே மற்றொரு விஷயத்தை பிசிசிஐ செய்யாமல் தவறியுள்ளது. அதாவது இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் முடிந்தவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. இதற்கான அணியை நேற்றே பிசிசிஐ அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அதனை அறிவிக்க மேலும் 2 - 3 நாட்கள் ஆகும் எனத்தெரிகிறது.

என்ன காரணம்
ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்து முடிவெடுத்த பின்னர் தான், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து அலோசிக்கவுள்ளனர். தற்போதைக்கு கேப்டனாக ஷிகர் தவானும், துணைக் கேப்டனாக சஞ்சு சாம்சனும் நியமிக்கப்படவுள்ளனர் என்பது மற்றும் தெரியவந்துள்ளது. ரோகித் சர்மாவின் படை அக்டோபர் 6ம் தேதியன்றே ஆஸ்திரேலியாவுக்கு செல்வதால், புதிய அணி தான் களமிறங்குகிறது.

மாற்று வீரர்
ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை நிரப்புவதற்காக முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சஹார், ஆவேஷ் கான், உமேஷ் யாதவ் ஆகியோர் போட்டிப்போட்டு வருகின்றனர். இவர்களில் ஷமிக்கும், சிராஜ்-க்கும் பிசிசிஐ அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications