சென்னை:ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
12-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் முதல் குவாலிபையர் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ் அணிகள் களம் இறங்கி உள்ளன.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்திருக்கிறது. சென்னையில் அணியில் காயம் காரணமாக கேதர் ஜாதவ் இந்த போட்டியில் இல்லை. அவருக்கு பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மெக்லகேனுக்கு பதிலாக ஜெயந்த யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேள்வி கேட்ட கோலி மீது ஆத்திரம்... கதவை உடைத்த அம்பயர்...! விளைவு ரூ5,000 பைன்... இது தேவையா?
மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி காக் (விக்கெட்), ரோகித் ஷர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹார்டிக் பாண்டியா, கிருஷ்ண பாண்டியா, பொல்லார்ட், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹார், ஜஸ்பிரீத் பும்ரா, லசித் மலிங்கா
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், முரளி விஜய், டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ். தோனி, அம்பதி ராயுடு, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹார், இம்ரான் தாஹிர்.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியை சந்திக்கும் அணி நாளை மறுநாள் நடைபெறும் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். இதனால் தான் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் இந்த சீசனில் 7 வெற்றிகளை குவித்துள்ளது. அதேநேரம் மும்பை அணிக்கு எதிராக நடந்த இரண்டு ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. அதிலும் ஒன்று தன்னுடைய சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி தான் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முழுபலத்தோடு களமிறங்கி வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.