
என்ன பிரச்சினை?
இந்த விவகாரத்தில் ரோகித் சர்மாவுக்கும் பங்கு உண்டு என்று விமர்சனம் எழுந்தது. இதன் காரணமாக, கோலியும், ரோகித்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக அந்த சமயத்தில் செய்திகள் வெளியாகின. இதனால் தென்னாப்பிரிக்க தொடரில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது.

சேத்தன் கருத்து
இந்த நிலையில் சேத்தன் சர்மாவின் ரகசிய வீடியோவில், இது அனைத்தம் பொய் என்று தெரியவந்துள்ளது. விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக பார்மில் இல்லாத போது ரோகித் சர்மா தான் அவருக்கு ஆதரவு கெடுத்து பேசியதாக சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

விரிசல் இல்லை
மேலும் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்த போட்டியும், விரிசலும் இல்லை என்றும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவு கொடுத்து வந்ததாக சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் கோலியும், ரோகித்தும் அமிதாப் மற்றும் தர்மேந்திரா போல் இருந்ததாகவும் சேத்தன் சர்மா பாராட்டியுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு
இதன் மூலம் விராட் கோலியின் கேப்டன் பதவியின் மீது ரோகித் சர்மா ஆசைப்படவில்லை என்று தெளிவாகி விட்டது. எனினும் இந்த வீடியோவில் சேத்தன் சர்மா, ரோகித் சர்மா தம்மிடம் அடிக்கடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசுவார் என சேத்தன் சர்மா கூறியதை பிடித்து கொண்டு சில கோலி ரசிகர்கள் ரோகித் சர்மாவை தாக்கினர்.

பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா ரசிகர்கள், கேப்டன் தேர்வுகுழத் தலைவரை தொடர்பு கொண்டு அணி தேர்வு குறித்து பேசுவதில் எந்த தவறு இல்லை என்றும், அது தான் கேப்டனின் பணி என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ரோகித் சர்மாவை சேத்தன் சர்மா பெருமையாக பேசியதை கோலி ரசிகர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications