மும்பை : ஐபிஎல் 2021 சீசனையொட்டி மும்பையில் சிஎஸ்கேவின் பயிற்சி முகாம் துவங்கியுள்ளது.
இதில் சிஎஸ்கே கேப்டன் தோனி, ருதுராஜ், அம்பத்தி ராயுடு உள்ளிட்டோர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அணியில் இணைந்த சுரேஷ் ரெய்னா தற்போது தன்னுடைய குவான்டைனை முடித்துக்கொண்டு இன்று முதல் பயிற்சி முகாமில் பங்கேற்கிறார்.
ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 10 முதல் துவங்கவுள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களை சிறப்பாக தயார் படுத்தி வருகின்றன. சென்னையில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த சிஎஸ்கே அணி தற்போது மும்பைக்கு தங்களது பயிற்சி முகாம்களை மாற்றியுள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அணியில் இணைந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா, தற்போது தன்னுடைய குவாரன்டைனை முடித்துவிட்டு, இன்று முதல் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார்.