
டி வில்லியர்ஸ்
உலக கோப்பை தொடர்களில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்களில் கெய்ல் மற்றும் தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோர் 37 சிக்சர்களுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

2 சிக்சர்கள்
இந் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டி நாட்டிங் ஹாமில் நடைபெற்றது. அந்த போட்டியில் 4வது ஓவரை ஹசன் அலி வீசினார். இந்த ஓவரை எதிர் கொண்ட கிறிஸ் கெய்ல் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார்.

அரை சதமடித்து அபாரம்
இதன் மூலம் உலக கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற புதிய சாதனை அவர் படைத்துள்ளார். அதாவது 40 சிக்சர்களை அவர் பறக்க விட்டிருக்கிறார். இந்த போட்டியில் 34 பந்துகளில் அரை சதம் அடித்து அவுட்டானார். 2015 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கெய்ல், இரட்டை சதம் விளாசினார்.

அப்ரிடி 314 சிக்சர்கள்
அந்த போட்டியில், 16 சிக்சர்கள் பறக்கவிட்டதன் வாயிலாக, உலக கோப்பையில் ஓர் இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார் கிறிஸ் கெய்ல். ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை மொத்தம் 314 சிக்சர்களுடன், அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில், பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு அடுத்தபடியாக, 2வது இடத்தில் உள்ளார். அப்ரிடி, 351 சிக்சர்கள் விளாசி இருக்கிறார்.

மன உளைச்சலில் கெயில்
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கெயில் உள்ள பல முன்னணி வீரர்கள், அணி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். அணியில் போதிய மரியாதை இல்லை... ஊதியம் இல்லை என்று அவர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். அதில் பெரும் மன உ ளைச்சலுக்கு ஆளானவர் கெய்ல்.

குவியும் பாராட்டுகள்
ஒரு கட்டத்தில் ஐபிஎல் தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்கும் முடிவில் இருந்தார் கெயில். அப்போது அணி நிர்வாகமானது கெயிலை அணியில் எடுத்ததோடு மட்டும் அல்லாது துணை கேப்டன் பொறுப்பையும் அளித்து கவுரவப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் களத்தில் நின்று சிக்சர் அடித்து உலக சாதனை நிகழ்த்திய கெயிலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications