
4 படுக்கை அறை...
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் ரோஹித் சர்மா, மும்பையில் ரூ. 30 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பில் நான்கு அறைகளைக் கொண்ட வீடு வாங்கியுள்ளார்.

நாக்பூர் சர்மா...
மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிறந்தவர் ரோஹித் சர்மா. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் களில் ஒருவராக திகழும் இவர், தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

காதல் பரிசு...
ரோஹித் தனது காதலி ரிகிதாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். எனவே, தனது காதல் மனைவிக்கு திருமணப் பரிசாக தருவதற்காக, மும்பை ஒர்லி பகுதியில் உள்ள அகுஜா டவரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாங்கியுள்ளார் இவர்.

29வது மாடியில்...
53 அடுக்குகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில், 29வது மாடியில் 4 படுக்கை அறைகள் கொண்ட வீட்டை அவர் வாங்கியுள்ளார்.

கடல் பாலத்துக்குப் பக்கத்தில்...
ஒர்லியில் இருந்து காரில் பாந்திராவுக்கு, கடல்மேல் அமைக்கப்பட்டுள்ள பாலம் வழியாக சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு 20 நிமிடத்தில் சென்று விடலாம்.

20 நிமிடத்தில் வான்கடே...
அதுபோல் வான்கடே மைதானத்துக்கும் 20 நிமிடத்தில் சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குதான் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் இதுவும் ரோஹித்துக்கு வசதியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications