கடும் போட்டி
சென்னை அணிக்கு மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ஒரு அனுபவ வீரர் தேவை. அதற்கேற்றார் போலவே தொடக்கத்திலேயே மயங்க் அகர்வால் ஏலம் விடப்பட்டார். இதனையடுத்து சிஎஸ்கே ஏலத்தை கேட்க குதித்தது. ஆனால் இந்த முறையும் காவ்யா மாறன் அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
காரணம் என்ன
பஞ்சாப் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட மயங்க் அகர்வால் ரூ. 2 கோடி என்ற அடிப்படை தொகையில் ஏலம்விடப்பட்டார். சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகள் மலமலவென தொகையை உயர்த்திக்கொண்டே செல்ல, ரூ. 5 கோடியை தாண்டி ஏலம் சென்றது. ஓப்பனிங்கிலேயே இவ்வளவு தொகை செல்ல வேண்டுமா என சற்று தயங்கிய போதும் விடாப்பிடியாக 5 கோடியை தாண்டி ஏலத்திற்குள் சென்றது.
பரபர கட்டம்
2022ம் ஆண்டு ஐபிஎல்-லேயே நல்ல ரெக்கார்டை மயங்க் வைத்திருந்தால் இரு அணிகளுக்குமே விட்டுக்கொடுக்க மனமே இல்லை. இதனால் ரூ. 8 கோடியை தாண்டி செல்ல, சிஎஸ்கேவுக்கு தயக்கம் அதிகரித்துவிட்டது. இதனால் தொகை அதிகரித்தவுடனேயே அதிரடியாக போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறோம் என அறிவித்துவிட்டனர்.
இறுதியில் என்ன ஆனது?
இறுதியில் ரூ. 8.25 கோடி தொகைக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியே ஏலம் எடுத்துக்கொண்டது. முதலில் ராஜஸ்தானுடன் மோதி ஹாரி புரூக்ஸ், பின்னர் சிஎஸ்கேவுடன் மோதி மயங்க் அகர்வால் என காவ்யா மாறன் கெத்து காட்டியது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.