சிறப்பான தொடக்கம்
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடியது. 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கையும் எட்டியது. அந்த அணியின் லிவிங்ஸ்டன் 44 ரன்களையும், ரகானே 39 ரன்களையும் எடுத்து அருமையான தளம் அமைத்து கொடுத்தனர்.
6வது இடத்துக்கு முன்னேற்றம்
அடுத்து களமிறங்கிய சாம்சன் அவுட் ஆகாமல் 48 ரன்களை எடுத்து அந்த அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் ராஜஸ்தான் 5 வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
|
சிஎஸ்கே தகுதி
அதன் காரணமாக சென்னை அணி பெற்றுள்ள வெற்றியின் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, ஐபிஎல் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
மாற்றப்பட்ட போட்டிகள்
அதே நேரத்தில், ப்ளே ஆப் மற்றும் இறுதிச் சுற்று போட்டிகளை அரைமணி நேரம் முன்னதாகவே துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி இந்தப் போட்டிகள் இரவு 7.30 மணிக்கே துவங்கும்.
அதிகமான நேரம்
இதுபோன்று நேர அவகாசம் அதிகரித்து நள்ளிரவு தாண்டி போட்டி நடப்பதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் துவங்க இருக்கும் பெண்களுக்கான டி20 போட்டிகளும் இரவு 7.30மணிக்கே துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.