சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் இஷான் கிஷன் இன்று சிஎஸ்கே போட்டி தொடர்பாக செய்தியாளர்கள சந்திப்பின் போது வாயை விட்டார். ஆனால், அதற்கு சிஎஸ்கே வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
கடந்த ஆட்டத்தில் 70 ரன்களுக்கு மேல் அடித்த இஷான் கிஷனிடம் சிஎஸ்கே ஆட்டம் குறித்து பேசிய போது, பதிரானாவுக்கு மரியாதை கொடுக்க முடியாது என்றும், அடிக்க வேண்டிய பந்தை அடித்து ஆடுவோம் என்று கூறி இருந்தார்.

மேலும் சிஎஸ்கே அணியிடம் நல்ல சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், அதிரடியாக விளையாடுவோம் என்று கூறி இருந்தார். ஆனால், இன்று மும்பை அணி சேப்பாக்கத்தில் பேட்டிங் செய்த போது, வெறும் 9 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
தீபக் சாஹர் பந்தை எதிர்கொண்ட போது, அவர் ஆட்டமிழந்தார். பேட்டி தரும் போது, ஓவராக பேசிய மும்பை அணியின் இஷான் கிஷன், பேட்டிங்கில் அதனை வெளிப்படுத்த முடியாமல் பெவிலியன் திரும்பினார். இதே போன்று தொடக்க வீரராக கிரீன் 6 ரன்களிலும், ரோகித் சர்மா டக் அவுட்டாகியும் வெளியேற, மும்பை அணி 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
