இன்றைய 15வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 15வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதவுள்ளன. இன்றைய தினம் சென்னை, மும்பை என இரு இடங்களில் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. மும்பையில் நடைபெறவுள்ள போட்டியில் சிஎஸ்கே தொடரின் தனது 4வது போட்டியில் இன்றைய தினம் மோதவுள்ளது.
ஐபிஎல்லில் 200 போட்டி
இன்றைய போட்டியின் மூலம் கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் தனது 200வது போட்டியை விளையாடவுள்ளார். இதுவரை எம்எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மா மட்டுமே இந்த எண்ணிக்கையை அடைந்துள்ள நிலையில் 3வது வீரராக இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் இதை பூர்த்தி செய்கிறார்.
காத்திருக்கும் தோனி
இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி இதுவரை 39 ஸ்டம்பிங்குகள் மற்றும் 109 கேட்ச்களை பிடித்து 148 விக்கெட்டுகளை அவுட் செய்துள்ள நிலையில், அவர் 150 அவுட் கணக்கை எட்ட இன்னும் 2 அவுட்களே தேவைப்படுகிறது. இன்றைய போட்டியில் அவர் அந்த சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
ரெய்னா காத்திருப்பு
இதனிடையே சிஎஸ்கே சின்ன தல சுரேஷ் ரெய்னா தனது 200வது சிக்ஸை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரு சிக்ஸே தேவைப்படுகிறது. அந்த சாதனையை அவர் இன்றைய போட்டியில் நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
சாதனைகளுக்கு காத்திருக்கும் வீரர்கள்
இதனிடையே ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய ஷர்துல் தாக்கூருக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் பாப் டூ பிளசிஸ் மொத்தமாக டி20 வடிவத்தில் 6,000 ரன்களை பூர்த்தி செய்ய 1 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த இரு சாதனைகளும் இன்றைய போட்டியில் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.