
எப்போது
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஏலம் நடக்க உள்ளது. இந்த ஏலம் பெரிய அளவில் நடக்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு புதிய அணிகள் இணைக்கப்படும் என்று கூறப்பட்டது.

கலைப்பு
இதனால் மொத்தமாக இருக்கும் அணிகள் எல்லாம் கலைக்கப்பட்டு பெரிய அளவில் ஏலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் சிஎஸ்கே அணி வலுவான வீரர்களை ஏலம் எடுக்க திட்டமிட்டு இருந்தது. சிஎஸ்கே அணியில் வாட்சன் ஓய்வு பெற்றுவிட்டார்.

ஹர்பஜன்
ஹர்பஜன், ரெய்னா குறித்து இன்னும் முடிவு வெளியாகவில்லை. கேதார் ஜாதவ், சாவ்லா போன்றவர்கள் மோசமான பார்மில் உள்ளனர்.இதனால் சிஎஸ்கே அணி இந்த ஏலத்தை பயன்படுத்தி புதிய வீரர்களை அணிக்குள் எடுக்க திட்டமிட்டு இருந்தது. பெரிய ஏலம் நடந்தால் நல்ல வீரர்களை அணியில் எடுக்கலாம் என்று சிஎஸ்கே நினைத்தது.

ஆனால் என்ன
ஆனால் சிஎஸ்கே அணி கொஞ்சம் கூட நினைத்து பார்க்காத வகையில் தற்போது பெரிய ஏலம் நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் அடுத்த வருடம் ஐபிஎல்லில் புதிய அணிகள் இணைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 புதிய அணிகள் 2022ல்தான் இணைக்கப்படும்.

மோசம்
பிசிசிஐ தலைவர் கங்குலி எடுத்த முடிவு இது என்கிறார்கள். இதனால் பெரிய அளவில் ஏலம் எடுக்க முடியாது. சிஎஸ்கே அணி இதனால் 2021லும் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய முடியாது. வாட்சன் போன்ற ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மட்டுமே சிஎஸ்கே மாற்று வீரர்களை பெற முடியும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











