மும்பை : ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மும்பையில் மோதவுள்ளன.
இந்த தொடரில் 5 போட்டிகளை மும்பையில் சிஎஸ்கே ஆடவுள்ள நிலையில், அங்கு தனது பயிற்சிகளை தற்போது துவங்கி நடத்தி வருகிறது.
இதனிடையே, அந்த அணியின் பேருந்து கண்ணை கவரும் மஞ்சள் நிறத்தில், தோனி உள்ளிட்டவர்களின் வரைபடங்களுடன் மும்பை நகர வீதிகளில் ராஜ ஓட்டம் போட்டு வருகிறது.
ஐபிஎல் சீசன் 2021 துவங்க இன்னும் சில தினங்களே உள்ளது. இந்த சீசனின் இரண்டாவது போட்டியிலேயே டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் வரும் ஏப்ரல் 10ம் தேதி மும்பையில் சிஎஸ்கே மோதவுள்ளது. தொடரை எதிர்கொள்ள, கோப்பையை கைப்பற்ற தொடர்ந்து அணி வீரர்களுடன் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி மும்முரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்கள் மும்பையின் அட்ராக்ஷனாக மாறியுள்ளனர். இந்நிலையில், இவர்கள் மட்டுமின்றி அணியின் புதிய பேருந்தும் மும்பை நகர வீதிகளில் ராஜ ஓட்டம் போட்டு வருகிறது. கண்ணை கவரும் மஞ்சள் வண்ணத்தில், அணியின் வீரர்கள் தோனி உள்ளிட்டவர்களின் போஸ்டர்களுடன் அந்த பேருந்து சிறப்பாக காணப்படுகிறது. அந்த பேருந்தை பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.
Vanakkam Mumbai! Super mass(k) entry into the city of dreams! #WhistlePodu #MaskPodu #Yellove 🦁💛 pic.twitter.com/WOGgP4xEMB
— Chennai Super Kings (@ChennaiIPL) March 26, 2021
கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக இதன் வீடியோவை சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், ரசிகர்களும் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.