சென்னை : ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 2 கேட்ச்களை தவறவிட்டது. இன்று தோனி 200வது முறையாக சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக களமிறங்கி உள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாட முற்பட்டு,10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜாஸ் பட்லர் மற்றும் படிக்கால் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ஜெய்ஷ்வால் முதலில் பொறமையாக விளையாடினாலும் அவருக்கு ஒரு நல்ல லைஃப் கிடைத்தது. ஆட்டத்தின் 5வது ஓவரின் முதல் பந்தில் தீக்சனா வீசிய பந்தை படிக்கல் அடிக்க முயன்றார்.
அது, நேராக அவருடைய பேட்டில் பட்டு, ஸ்லிப்பில் நின்ற மோயின் அலியிடன் சென்றது. எனினும் அதனை கணிப்பதற்குள் பந்து மின்னல் வேகத்தில் அவரிடம் சென்றது. இந்த கேட்சை பிடித்து இருந்தால் 14 ரன்களில் எல்லாம் படிக்கல் ஆட்டமிழந்து இருப்பார்.

இதே போன்று தமிழக வீரர் அஸ்வின் எதிர்கெண்ட முதல் பந்திலேயே ஜடேஜா ஓவரில் அவர் மோயின் அலிடம் அடிக்க, அதனை பிடிக்க முடியாமல் தவறவிட்டார். அதன் பிறகு அஸ்வின 2 சிக்சர்களை எல்லாம் பறக்கவிட்டு 22 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். மோயின் அலி செய்த 2 தவறு, சிஎஸ்கேக்கு சரிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.