|
கரன்
கரன் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 5 கோடிக்கு கார்ன் சர்மா எடுக்கப்பட்டார். இவருடைய குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். இந்தியாவை சேர்ந்த வளரும் பவுலர்களில் இவரும் ஒருவர்.
யார்
இவருக்கு இப்போதே 30 வயது ஆகிவிட்டது. உபியை சேர்ந்த இவர் நன்றாக பவுலிங் போடக்கூடியவர். அதேபோல் சென்னை அணிக்கு தேவைப்படும் போது ஆல்ரவுண்டராகவும் இருப்பார். அஸ்வினை விட சென்னை அணி இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது.
ஐபிஎல் வரலாறு
இவர் ஐபிஎல் போட்டியில் 2016ல் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன்பின் 2017ன் போது மும்பை அணிக்காக விளையாடினார். இந்த முறை சென்னை அணி அவர்களிடம் இருந்து வாங்கி உள்ளது. அவர்கள் ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
ரசிகர்கள் சொல்லும் காரணம்
இதற்கு ரசிகர்கள் சில வித்தியாசமான காரணம் சொல்லி வருகிறார்கள். இவர் 2016ல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது அந்த அணி கோப்பை வென்றது. 2017 போது மும்பை அணிக்காக விளையாடி கோப்பை வென்றார். இதனால் இந்த முறை சென்னை அணிதான் இந்தமுறை கோப்பை அடிக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.