ஸ்டிரைக்
இது வீரர்கள் தம்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஆஸி. கேப்டன் மார்க் டெய்லர் கூறுகையில், ஆஸி. வீரர்கள் ஸ்டிரைக்கிற்கு ஆயத்தமாகி வருகிறார்கள் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
ஆஷஷ் புறக்கணிப்பு
வங்கதேசத்தில் டெஸ்ட் போட்டி, நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற வேண்டிய புகழ்பெற்ற ஆஷஷ் தொடர் ஆகியவற்றில் ஆடுவதற்கு ஆஸி. வீரர்கள் தயாராக இல்லை என தெரிகிறது.
வார்னர் கோபம்
இதனிடையே துணை கேப்டன் டேவிட் வார்னர், ஆஸி. கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். வீரர்களுக்கு ஊதியம் வழங்காவிட்டால் ஆஷஷ் தொடரில் வீரர்கள் விளையாட மாட்டோம். ஆஸ்திரேலிய அணிக்கு டீம் இல்லாமல் போய்விடும் என எச்சரித்துள்ளார். இது ஆஸி. மீடியாக்களில் எப்படியோ கசிந்துவிட்டது.
பெங்களூர் வருகை
இதனிடையே வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் பங்கேற்க பெங்களூர் வந்துள்ளது.