
தீபக் சாஹர் காயம்
ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தீபக் சாஹர் பேட்டிங்கும் செய்வதால், அவர் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக பயிற்சி செய்த நிலையில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது.

உறுதியாகிவிட்டது
இதனையடுத்து, அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில், வாசிங்டன் சுந்தர் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் தீபக் சாஹர் தோல்வி அடைந்ததாக தகவல் வெளியானது, இதனையடுத்து, அவர் டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

மாற்று வீரர்
இந்த நிலையில், தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக, விலகி 6 மாதம் ஓய்வுக்கு பிறகு திரும்பிய தீபக் சாஹர், மீண்டும் ஒரே மாதத்தில் காயமடைந்து இருப்பது இந்திய அணி நிர்வாகத்தை எரிச்சல் அடைய செய்துள்ளது.

இந்தியாவுக்கு பின்னடைவு
தீபக் சாஹரை சேர்த்து அணியில் பேட்டிங்கையும் பவர் பிளே ஓவர்களையும் வலுப்படுத்தலாம் என்று நினைத்த ரோகித்தின் கனவு பொய்யானது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. ஆனால் தீபக் சாஹர் இல்லாதது கிட்டத்தட்ட உறுதி. பல முன்னணி பவுலர்கள் காயம் காரணமாக விலகுவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications











