
ஏமாற்றம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (w/சc), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர். அதேசமயம், டெல்லி அணியில் ஒரு முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அந்த அணியில், ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் (w/c), ஸ்ரேயாஸ் ஐயர், ஷிம்ரோன் ஹெட்மயர், டாம் கர்ரன், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அணியில், ரிபல் படேலுக்கு பதிலாக டாம் கர்ரன் சேர்க்கப்பட்டனர். சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரெய்னா இல்லாததை விட, மிடில் ஆர்டரில் சொதப்பி வரும் உத்தப்பாவுக்கு பதில், இளம் வீரர் ஜெகதீசன் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் உத்தப்பாவுக்கே தோனி வாய்ப்பு அளித்திருப்பது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

நல்ல வாய்ப்பு
சென்னை அணியைப் பொறுத்தவரை, அமீரகத்தில் சேஸ் செய்த அனைத்துப் போட்டிகளிலும் வென்றிருக்கிறது. ஆனால், முதலில் பேட்டிங் செய்த மூன்று போட்டிகளிலும் தோற்றிருக்கிறது. ஆகையால், தோனி டாஸ் வென்றிருப்பது பல வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதமாக அமைந்தது. கடந்த சில போட்டிகளாக டாஸ் இழந்த தோனி, கரெக்ட்டாக பிளே ஆஃபில் டாஸ் வென்றிருந்தார். இயற்கையாகவே பார்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல வாய்ப்பை, சூழலை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், டெல்லி அணியை எதிர்பார்த்ததைவிட சிறப்பாக விளையாடியுள்ளது.

ரிஷப் பண்ட் - ஹெட்மயர்
ஷிகர் தவான் 7 ரன்களில் ஹேசில்வுட் ஓவரில் அவுட்டானாலும், ப்ரித்வி 'ஏவுகணை' இன்று சீறிப் பாய்ந்தது. சென்னை பவுலர்களாய் பாரபட்சமின்றி விட்டு விளாசினார். 34 பந்துகளில் 60 ரன்கள் குவித்த ப்ரித்வி, ஜடேஜா ஓவரில் கேட்ச்சானார். எனினும், ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் ஹேசில்வுட் பந்தில் கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் டெல்லி அணி, 80 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பிறகு, ரிஷப் பண்ட் - ஹெட்மயர் ஜோடி சரிந்த அணியை மீட்டெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக 'சந்திரமுகி'யாக மாறி வரும் ஹெட்மயர், இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தினார்.

173 ரன்கள் இலக்கு
பண்ட் - ஹெட்மயர் ஜோடி 17வது ஓவரில், 6வது விக்கெட்டுக்கு அரைசதம் விளாசியது. இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் சொதப்பி இருந்தாலும், டெல்லி நிலைமை பரிதாப நிலைக்கு சென்றிருக்கும். ஆனால், இது 'பிளே ஆஃப்' என்ற பொறுப்பை உணர்ந்து இருவரும் மிக நேர்த்தியாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதிக் கட்டத்தில் ரிஷப் பண்ட் சென்னை பவுலர்களை விட்டு விளாசி, சென்னை பவுலர்கள் திக்கற்று வந்தனர். ஒற்றைக் கையில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். சிறப்பாக ஆடிய ஹெட்மயர், 24 பந்துகளில் 37 ரன்கள் விளாசி பிராவோ ஓவரில் கேட்ச்சானார். இருந்தாலும், 'நான் இங்க தான் இருக்கேன் பாஸ்' மோடில் இருந்த ரிஷப் பண்ட், 35 பந்துகளில் 51 ரன்கள் குவிக்க, டெல்லி கேபிட்டல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. மற்ற மைதானங்களை ஒப்பிடுகையில், அளவில் பெரிய இந்த துபாய் ஸ்டேடியத்தில், 173 ரன்கள் இலக்கு என்பது உண்மையிலேயே மிகக் கடினமான இலக்கு தான்.


Click it and Unblock the Notifications











