
மிஸ்டர் கூல்
கேப்டன் டோணிக்கு கூல் கேப்டன் என்பதுதான் செல்லப்பெயர் என்று குழந்தைக்கு கூட தெரியும். அவர் என்ன மோசமான விஷயம் நடந்தாலும் தன்னுடைய முகத்தில் வித்தியாசம் காட்ட மாட்டார். வெற்றி பெற்றாலும் கூட அதை பெரிய அளவில் அவர் இதுவரை கொண்டாடியதே இல்லை. எப்போதும் சமநிலையுடன் இருப்பார்.

சோகமாக சென்றார்
ஆனால் நேற்றைய போட்டியில் அவர் அவுட்டாகி சென்றதும் மிகவும் சோகமாக இருந்தார். அவருக்கு அடுத்து ஜடேஜா, ஹர்பஜன் என வீரர்கள் வரிசையாக அவுட் ஆனதும் அவர் மிகவும் சோகமாக ஆனார். முதல் முறை அவர் கேமராவிற்கு முன் மிகவும் சோகமாக இருந்ததை காட்டிக்கொண்டுள்ளார்.

பதட்டம்
அதேபோல் அவர் கடைசி மூன்று ஓவர்களில் மிகவும் பதட்டமாக இருந்தார். பிராவோ அங்கு சிக்ஸ் அடிக்கும் போது, டோணி இங்கும் வெறும் கையை வைத்து சிக்ஸ் அடிப்பது போல விளையாடிக் கொண்டு இருந்தார். அதை பார்க்கும் போது ரசிகர்களுக்கு பிபி எகிறியது. இதற்கு முன்பு டோணி இதுபோல் நடந்து கொண்டது இல்லை.
கொண்டாட்டம்
அதன்பின் சென்னை அணி வெற்றி பெற்ற போதும் டோணி மிகவும் சந்தோசமாக கொண்டாடினார். வேகமாக கீழே இறங்கி வந்து பிராவோவை கட்டிப்பிடித்தார். அதே போல் அவர் உள்ளே சந்தோசமாக கைதட்டி கொண்டாடியது வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

2 வருட பசி
இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். 2 வருடமாக சென்னை அணி விளையாடாத காரணத்தால் அவர் சோகமாக இருந்துள்ளார். இப்போது முதல் போட்டியில் வெற்றி பெறுவது அவருக்கு பெரிய அளவில் சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. அதனால்தான் அவர் இப்படி போட்டியை கொண்டாடி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
