
டோணி மீது விமர்சனம்
போட்டிக்கு பிறகு, பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய டோணியிடம், சமீபகாலமாக அவுக்கு எதிராக எழுப்பப்பட்டுவரும் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. டி20 தொடரை இழந்ததோடு, முதல் ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோற்றதால் டோணி மீது கடும் விமர்சனம் எழும்பியிருந்தது.

வீரராகவும் செயல்படவில்லை
கேப்டனாக மட்டுமின்றி, சக வீரராகவும், டோணி சிறப்பாக செயல்படவில்லை என்று விமர்சனம் செய்த விமர்சகர்களும், பத்திரிகைகளும், டோணியை நீக்கிவிட்டு வேறு நபரை தேட வேண்டும் என்று ஆலோசனை வழங்கின. அகர்க்கர், அசாருதீன் போன்ற முன்னாள் பிரபலங்களும் அதில் இணைந்துகொண்டனர்.

அனைத்திலும் பெஸ்ட் டோணி
ஆனால், நேற்றைய ஆட்டத்தில், தனிப்பட்ட வீரராக சிறப்பாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்த டோணி, கேப்டன் என்ற முறையில், பவுலர்களை முக்கியமான நேரங்களில் மாற்றி, மாற்றி விக்கெட்டுகளை கொள்முதல் செய்யவும் தவறவில்லை. அனைத்து துறைகளிலுமே நேற்று டோணி அபாரமாக ஆடினார். இதை கருத்தில் வைத்துதான் டோணியிடம் அந்த கேள்வி எழுப்பப்பட்டது.
வாளுடன் இருந்தனர்
கேள்விக்கு பதிலளித்த டோணி, மிகவும் கடினமான ஒரு போட்டியை ஆடினோம். அது ஒன்றும் எளிதான காரியம் இல்லை. இருப்பினும், தப்புகள் நடந்துவிடாதா என்று எதிர்பார்த்தபடி வாளை தயாராக பிடித்தபடி சிலர் காத்திருந்தனர் என்று சொன்னார்.


Click it and Unblock the Notifications











