
டோணி ஆப்சென்ட்
இந்திய அணியின் வலைப் பயிற்சியின்போது டோணி இடம் பெறவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியது.

இஷாந்த் பிரசென்ட்
அதேசமயம், 2வது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்ல முக்கியக் காரணமான வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பயிற்சியில் ஈடுபட்டார். அவர் முழுமையாக காயத்திலிருந்து குணமாகியுள்ளார். இதனால் 5வது போட்டியில் அவரும் இடம் பெறுகிறார்.

உற்சாகப் பயிற்சி
அடுத்தடுத்து 2 தோல்விகளைச் சந்தித்துள்ள போதிலும் கூட இந்திய வீரர்கள் அதைப் பொருட்படுத்தாமல் கடைசிப் போட்டியில் வெற்றியைப் பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

நாளை தொடக்கம்
நாளை 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. எப்படி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் அபாரமாக இந்தியா வென்றதோ அதே போல இதே லண்டனின் ஓவல் மைதானத்திலும் இந்தியா வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

ஓய்வெடுக்கிறார் டோணி
டோணி வராதது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் கூறுகையில் டோணிக்கு காயம் ஏதும் இல்லை. அவர் நலமாகத்தான் இருக்கிறார். தனது குடும்பத்துடன் சற்று ஓய்வாக இருக்கிறார், அவ்வளவுதான் என்று விளக்கப்பட்டது.

டங்கன் - கோஹ்லி
டோணி இல்லாததால், பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், துணை கேப்டன் விராத் கோஹ்லி ஆகியோர் அணியின் பயிற்சியை மேற்பார்வை பார்த்தனர்.


Click it and Unblock the Notifications