சென்னை: கூப் கேப்டன் டோணி கேப்டன் பதவியிலிருந்து விடை பெற்று விட்டார். வீரராக அவர் ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் டோணியின் மாஜிக் கேப்டன்சியை ரசிக்க முடியாது என்ற சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
டோணிக்கு கிரிக்கெட் உலகிலிருந்தும், திரையுலகிலிருந்தும், அரசியல் தலைவர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் புகழாரங்கள் குவிந்து கொண்டுள்ளன.
இந்த நிலையில் டோணி குறித்து நெகிழ்ச்சியுடன் சிலாகித்துள்ளார் டோணியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் டோணி வேடத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
There is no one like you.
— Sushant Singh Rajput (@itsSSR) January 4, 2017
You're the reason for millions of smiles.
Take a bow my Captain.🙏@msdhoni #dhoni pic.twitter.com/NLRtTlcPhq
டோணி - தி அன் டோல்ட் ஸ்டோரி என்ற படம் டோணியின் வாழ்க்கைக் கதையாகும். பெரும் வெற்றி பெற்று ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்த இப்படத்தில் டோணியாக அசத்தியிருந்தார் ராஜ்புத். டோணியின் ஓய்வு முடிவு இவரையும் சோகத்துக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள டிவீட்டில், உங்களைப் போல யாரும் இல்லை. கோடிக்கணக்கான புன்னகைகளுக்குக் காரணமானவர் நீங்கள். என் கேப்டனுக்கு தலை வணங்குகிறேன் என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.
டிவிட்டரிலும், பேஸ்புக் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களிலும் டோணி குறித்த பதிவுகள் அலை அலையாய் குவிந்து கொண்டுள்ளன.