
சாஹா
இது தொடர்பாக ஐசிசி இணைய தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,, சதஹா சிறந்த விக்கெட் கீப்பர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ரிஷப் பண்ட், முன்னணி வீரராகவும், முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பராகவும், தனது அதிரடி பேட்டிங் மூலம் நிலை நிறுத்தி கொண்டு விட்டார்.

இளம் வீரர்கள்
சாஹாவுக்கு 37 வயதாகி விட்டது. இந்திய அணியில் 2வது விக்கெட் கீப்பராக சாஹாவை சேர்ப்பதற்கு பதிலாக, இன்னொரு இளம் வீரருக்கு தான் வாய்ப்பு வழங்குவது சரியாக இருக்கும். பிசிசிஐயின் இந்த முடிவு சரியானது தான். ஆனால், நீங்கள் ஓய்வு பெறுங்கள், இனி உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறும் போது உங்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும்.

ஏன் இந்த முடிவு?
சிறு வயதிலிருந்து நாம் தினமும் செய்த பயிற்சிகள், இனி செய்ய வேண்டாம் என்று நம்மிடம் கூறும் போது அதனை ஏற்று கொள்ள முடியாத, விழுங்க கஷ்டமாக இருக்கும். ஆனால், பிசிசிஐ அணிக்காக தான் இந்த முடிவை எடுத்தது என்று புரிந்து கொண்டு சாஹா நகர வேண்டும்.
Recommended Video

பாராட்டு
தாம், விக்கெட் கீப்பராக இருக்கும் போது, தோனி எப்படி ஆதிக்கம் செலுத்தினாரோ, அதே போல் ரிஷப் பண்ட் தற்போது இருப்பதாகவும் தினேஷ் கார்த்திக் பாராட்டு தெரிவித்தார், தினேஷ் கார்த்திக் கடைசியாக 2019 உலககோப்பை போட்டியில் இந்தியாவுக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











