சிறப்பான ஆட்டம்
குறிப்பாக நீண்ட இடைவெளிக்குப்பின் அணிக்கு திரும்பிய கிறிஸ் கெய்ல் இரண்டு சதங்கள், இரண்டு அரைசதங்கள் விளாசினார். கடைசி ஒருநாள் போட்டியில் தாமஸ் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து 113 ரன்னில் சுருண்டது.
அணிகளுக்கு அச்சுறுத்தல்
மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்த காட்டடி ஆட்டம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலககோப்பையில் அனைத்து அணிகளுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று டுவெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.
இளம்வீரர்கள் உள்ளனர்
இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் , எங்களது அணியில் சிறந்த இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்டத்திறனில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
வீரர்களுடன் பேசினேன்
நம்பர் 1 அணியான இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதை பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. கேப்டன் ஹோல்டர், மற்ற வீரர்களிடமும் நான் பேசினேன். இந்த அணி உலக கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும். யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய நாட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றார்.