
டெஸ்ட்
3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது. அதன்பின் டி 20 தொடர் முழுக்க மார்ச் 12 முதல் 20ம் தேதி வரை அகமதாபாத்தில் நடக்க உள்ளது.

போட்டி
அதன்பின் புனேவில் 3 ஒருநாள் போட்டிகளும் மார்ச் மாதத்தில் இருந்து நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில், இந்த கிரிக்கெட் தொடர் முழுக்க குஜராத், தமிழகத்தில் சென்னை மற்றும் புனே ஆகிய மைதானங்களில் மட்டுமே நடக்கிறது. இந்த போட்டிகளை காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மக்கள்
மக்கள் கூட்டத்தோடு இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த கிரிக்கெட் தொடரில் மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்க கூடாது என்று இங்கிலாந்து அணி கோரிக்கை வைத்துள்ளது. கொரோனா காலத்தில் பெரிய பெரிய மைதானங்களில் போட்டி நடக்கிறது. இதில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம்.

பாதுகாப்பு
பாதுகாப்பு கருதி ரசிகர்களை அனுமதிக்க கூடாது. பந்துகள் ரசிகர்களிடம் செல்லும். இது வீரர்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும். அதனால் இந்த தொடரை ரசிகர்கள் இன்றி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதை இந்திய அணி நிர்வாகம் ஏற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வருகிறது.


Click it and Unblock the Notifications











