அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான ஒரு முடிவை எடுத்தார்.இதனால் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு எல்லாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அப்துல்லா ஷபிக் 20 ரன்களும், இமாம் உல் ஹக் 36 ரன்களும் எடுக்க சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் ஐம்பது ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தான அணி 155 ரன்களில் மூன்று விக்கெட்டுகள் என்ற ஸ்கோருடன் 29.4 வது ஓவரில் இருந்தது. இன்னும் 20 ஓவர் எஞ்சிய நிலையில் பாகிஸ்தான் அணி 300 ரகளை மேல் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் அந்த அணியில் நட்சத்திர இளம் வீரர் சவுத் சக்கில் களம் இறங்கினார்.
அப்போது குல்தீப் யாதவ் வீசிய ஒரு பந்து நன்றாக திரும்பி அவரது காலில் பட்டது. ஆனால் இதற்கு இந்திய வீரர்கள் அவுட் கேட்டும் கள நடுவர் அவுட் தரவில்லை. இதனால் இதற்கு அவுட் கேட்கலாமா வேண்டாமா என ரோகித் சர்மா கே எல் ராகுலுடன் கேட்டார். ஆனால் ராகுல் அதற்கு சரியான ஒரு பதிலை தரவில்லை. எனினும் மற்ற வீரர்கள் அங்கு வந்து உடனே டிஆர்எஸ் எடுக்கலாம் நம்மிடம் ஏற்கனவே இரண்டு டிஆர்எஸ் இருக்கிறது.

இன்னும் 20 ஓவர் தான் இருப்பதால் ஒரு டி ஆர் எஸ் சென்றாலும் கவலை இல்லை என்று கூறினர்.இதனை அடுத்து ஐந்து நொடிகள் எஞ்சியிருந்த நிலையில் ரோகித் சர்மா டி ஆர் எஸ் முடிவு எடுத்தார். இதனை அடுத்து மூன்றாம் நடுவர் ரீப்ளே செய்து பார்த்ததில் அது lbw என உறுதியானது. இதை அடுத்து சவுத் ஷகில் 6 ரன்களில் வெளியேறினார்.

இதேபோன்று இப்திகார் அகமதும் நான்கு ரன்களில் அதே ஓவரில் ஆட்டம் இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 168 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தோனி போல் drs முடிவை சரியாக ரோகித் சர்மா எடுத்ததன் காரணமாகவே விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றால் கதை வேறு மாதிரி ஆகியிருக்கும்.