டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஐபிஎல் அல்லாத பணிகளைப் பார்க்கும் அதிகாரத்தை சிவ்லால் யாதவுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.
அதேசமயம், ஐபிஎல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் கவாஸ்கரே கவனிப்பார் என்றும் அது தெரிவித்துள்ளது.
கவாஸ்கர் இடைக்காலத் தலைவராக பணியாற்றும் காலத்துக்கு அதற்குரிய ஊதியத்தை கிரிக்கெட் வாரியம் வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஐபிஎல் தலைமை செயல் அதிகாரி சுந்தர்ராமனை வைத்துக் கொள்ளலாமா அல்லது நீக்கலாமா என்பது குறித்து தீர்மானிக்கும் முடிவையும் கவாஸ்கரிடமே விட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
மேலும், கிரிக்கெட் வர்னணைகளில் தொடர்ந்து ஈடுபடுவது குறித்து கிரிக்கெட் வாரியத்துடன் தனியாக பேசி ஒப்பந்தம் செய்து கொள்ளவும் கவாஸ்கருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஐசிசி கூட்டங்களில் சீனிவாசன் பங்கேற்பதை அனுமதிப்பது தொடர்பாக எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.