
ஆசிய கோப்பை தொடர்
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் சிறப்பாக இருந்தாலும், பவுலிங்கில் சற்று பின் தங்கியுள்ளது. முன்னணி வீரர்கள் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இல்லாததால் இளம் வீரர்கள் ஆர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு தந்துள்ளனர். மிகப்பெரிய தொடரில் அனுபவமே இல்லாத வீரர்களுக்கு வாய்ப்பு தருவதா என ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பாக். சீனியர் பேச்சு
இந்நிலையில் இந்தியா முக்கிய விஷயத்தை செய்யாமல் தவறு செய்துவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர், ஆகிப் ஜாவித் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எந்தவகை கிரிக்கெட் என்றாலும் வேகம் தான் மிக முக்கியம். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் போட்டியை வென்று கொடுக்கலாம். ஆனால் 4 தரமான பவுலர்கள் தான் தொடரை வென்று கொடுப்பார்கள்.

காரணம் என்ன
இப்போதெல்லாம் எந்த பவுலரும் 150 கி.மீ வேகத்தில் பவுலிங் வீசுவதற்கு முயற்சி கூட செய்வது இல்லை. ஆனால் 155 கிமீ வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக்கை பயன்படுத்த இந்தியா தவறவிட்டுள்ளது. அதிக வேகம் மற்றும் சரியான இடத்தில் பந்துவீசுகிறார். இதனை விட வேறு என்ன வேண்டும். உலகக் கோப்பைக்கு முன்பாக இந்த தொடரில் அவருக்கு நிறைய வாய்ப்பளித்து அவரை வளர்த்திருக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய பிட்ச்
வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு தரும் ஆஸ்திரேலிய களத்தில் உம்ரான் மாலிக் போன்ற பவுலர்கள் தான் பயன்படுவார்கள். நானாக இருந்திருந்தால் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் அவரையும் சேர்த்து ஒரு தரமான கூட்டணையை உருவாக்கியிருப்பேன். வெறும் 3 போட்டிகளில் சொதப்பினார் என்பதற்காக அவரை ஓரம்கட்டுவது சரியில்லை என ஆகிப் ஜாவித் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











