கேரி கிறிஸ்டன்
குறிப்பாக, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் விண்ணப்பித்திருக்கிறார். இலங்கையின் ஜெயவர்தனேவும் விண்ணப்பித்துள்ளார்.
சேவாக் விண்ணப்பம்
பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு, முன்னாள் அதிரடி வீரர் சேவாக் அப்ளிகேஷன் போட்டுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பயிற்சியாளர் அருண் குமார் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர். இந் நிலையில், தற்போது மேலும் ஒரு மூத்த பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
பிரவீன் ஆம்ரே
இந்திய முன்னாள் வீரர் பிரவீன் அம்ரே தான் இந்த பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தற்போது விண்ணப்பித்திருக்கிறார். அனுபவமிக்க பிரவீன் அம்ரே, மும்பை ரஞ்சி கோப்பை அணிக்கு சில வருடங்கள் பயிற்சியாளராக பதவி வகித்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும் பயிற்சியாளர் பதவியில் இருந்திருக்கிறார்.
அதிக வாய்ப்பு?
தற்போது அமெரிக்கா கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக பதவியில் இருந்து வரும், இவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார். பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இவருக்கு இந்திய அளவில் மட்டுமல்லாது, வெளி நாடுகளிலும் நல்ல அனுபவம் உள்ளது. எனவே, இவர் தேர்வாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.