
கம்பீர் பேச்சு
இது குறித்து பேசிய கம்பீர், ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வாங்கப்பட்டு இருப்பது நல்ல முடிவு தான். ஆனால் அவருக்கு பதில் தீபக் ஹூடாவை தான் அணியில் சேர்த்திருக்க வேண்டும். பந்துவீச்சின் போது தீபக் ஹூடாவையும் பயன்படுத்தி இருக்கலாம். இந்த வாய்ப்பை இந்தியா வீணடித்துவிட்டதாக நினைக்கிறேன்.

தினேஷ் கார்த்திக் ஏன்?
இதே போன்று ரிஷப் பண்டை அணியில் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் தினேஷ் கார்த்திக்கும் அணியில் நீடிக்கிறார். இது தவறான முடிவு. தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு, ரிஷப் பண்டை வைத்திருக்க வேண்டும்.ஹர்திக் பதிலாக தீபக் ஹூடாவை சேர்த்திருக்க வேண்டும். இந்த இரண்டு தவறை ரோகித் செய்துவிட்டதாக கம்பீர் விமர்சித்துள்ளார்.

உண்மையான காரணம்
இதே போன்று சபா கரீம் போன்ற முன்னாள் வீரர்களும் ரிஷப் பண்டை பிளேயிங் லெவனில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், ரோகித் சர்மா, டிராவிட் கூட்டணி எடுத்த முடிவு சரியானது தான். அதற்கு காரணம், ரிஷப் பண்ட் ஒரு ஃபினிஷர் அல்ல. அவர் அதிரடியாக ஆடுவார் என்பது உண்மை தான். ஆனால் டி20 போட்டியில் இந்திய அணிக்காக அவர் பெரிய இன்னிங்சை ஆடவில்லை.

உண்மை என்ன?
அப்படி ஆடி இருந்தாலும், அது நடுவரிசையில் தான் விளையாடி இருக்கிறார். ஆனால் ரிஷப் பண்டை விட சூர்யகுமார் யாதவ் தான் சிறப்பாக ஆடி இருக்கிறார். இதனால் ரிஷப் பண்டை நடுவரிசையில் இடம் கிடைக்காது.இதே போன்று ஃபினிஷர் ரோலில், தினேஷ் கார்த்திக் தான் கடந்த 6 மாதமாக சிறப்பு ஆடி இருக்கிறார். தற்போது திடீரென்று அந்த இடத்தில் ரிஷப் பண்டை வைத்து ஆட வைப்பது முட்டாள் தனம். இத்னை தான் கம்பீர் போன்ற வீரர்கள் திரும்ப திரும்ப செய்கின்றனர்,


Click it and Unblock the Notifications